பிரபல கொள்ளையன் கைது!
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டார். தனிப்படை போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளை சம்பவத்தை இடுபட்டது கிருஷ்ணகிரி தண்டேகுப்பத்தை சேர்ந்த பிரபல கொள்ளையன் சதீஷ்குமார் (25), என்பது தெரியவந்தது. ரூ. 32 லட்சம் மதிப்பிலான 80 பவுன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் சதீஷ்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிப்காட் போலீசாரின் தீவிர விசாரணை!
ஒசூர் மூக்கண்டப்பள்ளி எம். ஜி. ஆர் நகசேர்ந்த ராஜேஷ் (31), இவர் இதே பகுதியில் மேன்பவர் ஏஜென்சீஸ் நடத்தி வருகிறார். இவர் கடந்த 13-ந்தேதி தனது நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதாக வீட்டில் கூறி சென்றார். ஆனால் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை பல இடங்களில் தேடியும் அவர் இல்லாத்தால் மனைவி விவேதா கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.
அரசனட்டி பகுதியில் கொலை மிரட்டல்!
ஒசூர் அரசனட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் (44), இவரது சகோதரி மாரம்மாவிடம் ரூ.2 லட்சம் கடனாக அதே பகுதியை சேர்ந்த ரவி (48) என்பவர் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பணத்தை லட்சுமிநாராயணன் கேட்டபோது அவர்களுக்குள் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் லட்சுமிநாராயணனை ரவி தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்