திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, திருவள்ளூர் உட்கோட்ட மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வயலூர் பேருந்து நிறுத்தம் அருகே உதவி ஆய்வாளர் திரு. சுரேஷ் அவர்களின் தலைமையில், தலைமை காவலர்கள் திரு.நீலமேகன், திரு.ஜெகநாதன் ஆகியோர்கள் உடன் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது கை பையுடன் இரண்டு நபர்கள் தனியாக நடந்து சென்றபோது சந்தேகிக்கும் விதமாக அவரிடம் விசாரணை செய்தபோது அவர்களிடமிருந்து சுமார் 26 மொபைல்போன்கள் கைப்பற்றப்பட்டது, மேலும் அவர்களிடம் விசாரணை செய்தபோது அனைத்து மொபைல் போன்களும் திருடப்பட்டவை என ஒப்புக்கொண்டனர், மேலும் காவல்துறையினர் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்