அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் கடந்த 16/5/2020 அன்று அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சிறுவர் மற்றும் பெரியவர்கள் என இரு பிரிவுகளின் கீழ் “கொரோனாக்கு எதிரான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நாட்களில் வீட்டில் இருக்கும் நேரத்தை எப்படி பயனுள்ளதாக கழிப்பது” என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி Zoom Cloud என்ற செயலி மூலம் இணையம் வழியாக நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களை பாராட்டி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் , மாவட்ட காவல் அலுவலகத்தில் 18/05/2020 அன்று பாராட்டுச் சான்றிதழ், பரிசுத் தொகை மற்றும் திருக்குறள் புத்தகம் ஆகியவற்றை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன்( பொறுப்பு) அவர்கள், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மணவாளன் அவர்கள், ACTU காவல் ஆய்வாளர் திருமதி.சுமதி அவர்கள்,தனிப் பிரிவு ஆய்வாளர் திருமதி.செல்வகுமாரி அவர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சந்திரகலா அவர்கள் மற்றும் போட்டியில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.