செங்கல்பட்டு : செங்கல்பட்டு ரயில் நிலையத்தை, 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தோர் பயன்படுத்துகின்றனர். சென்னை உட்பட பல்வேறு இடங்களுக்கு, அரசு, தனியார் நிறுவன வேலை மற்றும் கூலி தொழிலாளர்கள் தினம் பயணிக்கின்றனர். ரயில் நிலைய வளாகத்தில், கட்டண இருசக்கர வாகன நிறுத்தம் இடம் உள்ளது. வாகனங்கள் இங்கு போதிய அளவு நிறுத்தப்படுகின்றன. இடப்பற்றாக்குறை காரணமாக, ரயில்வே ஊழியர் குடியிப்பு மற்றும் ரயில்வே, காவல் நிலையம் நுழைவாயில், உள்ளிட்ட இடங்களில், பல்வேறு இடங்களில், இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.
இந்த வாகனங்களை, மர்ம நபர்கள் திருடிச் செல்கின்றனர். வாகன திருட்டை தடுக்கவும், மர்ம நபர்களை பிடிக்கவும், நகர காவல் துறையினர், ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது, மேற்கண்ட பகுதியில், காவல் துறையினர், ரோந்து பணிக்கு செல்வதை நிறுத்தியதால், வாகன திருட்டு மீண்டும் அதிகரித்துள்ளது. புதிய வாகனங்களை கண்டறிந்து, மர்ம நபர்கள் திருடிச்செல்கிறனர். வாகனத்தை பறி கொடுத்தோர், காவல் துறையில், புகார் கொடுக்கின்றனர். ஆனால், நடவடிக்கை எடுக்காமல், கிடப்பில் போட்டுள்ளனர். எனவே, வாகன திருட்டை தடுக்க, ரயில் நிலைய வளாகத்தில், காவல் துறையினர், தினமும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.