மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகம் கடக்கம் பாலம் அருகில் மகாலிங்கம், 44, என்பவரிடமிருந்து 3 பவுன் செயின், பணம் ரூபாய் 2000, மற்றும் 01 செல்போன் ஆகியவற்றினை அடையாளம் தெரியாத 4 நபர்கள் பறித்து சென்றுவிட்டதாக மேற்படி மகாலிங்கம் கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்த பெரம்பூர் ஆய்வாளர் சம்பவத்தில் ஈடுபட்ட 1. சக்திவேல், பெரம்பூர். 2. அபிநாத் 19, மயிலாடுதுறை. 3. முகமது சுல்தான் 20, மயிலாடுதுறை. 4. காசி (எ) காவியன் 17.மயிலாடுதுறை ஆகியோரை பிடித்து செயின், பணம், செல்போன் மீட்கப்பட்டது. சம்பவம் நடைபெற்ற 3 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.