தருமபுரி : கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திருமதி K.பவானிஸ்வரி.IPS, அவர்கள், நேற்று வருடாந்திர ஆய்வுக்காக தருமபுரி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார்.அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் வரவேற்றார். இதைத் தொடர்ந்து தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில் காவலர் அணி வகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு. காவலர்களின் உடை பொருட்கள் மற்றும் காவல்துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்களை ஆய்வு செய்தார். மேலும் காவலர்களின் கவாத்துப் பயிற்சியை பார்வையிட்டு காவலர்களின் நிறைகுறைகளை கேட்டறிந்து ஆயுதப் படையில் இறகு பந்து மைதானத்தை திறந்து வைத்தார். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு வழக்குகோப்புகள், வருகை பதிவேடுகள் குறித்து பார்வையிட்டு சென்றார்.