திருப்பூர்: ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், தொழிலாளர்கள் வேலை இழந்து, தாங்கள் தங்கியிருந்த இடத்திலேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், மீண்டும் மே 17 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதால், திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.கணேசன் அவர்கள், வடக்கு காவல் நிலையத்திற்கு வருகை தந்த சுமார் 500 வடமாநில தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
வடமாநில தொழிலாளர்களுக்கு அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்ட உடன், தாங்கள் வசிக்கும் இடத்திற்கே காவலர்கள் மூலம், தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் எனவும், அதுவரை நீங்கள் வீட்டிலேயே இருங்கள் எனவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கோ, காவல் நிலையங்களுக்கோ ரயில் நிலையத்திற்கோ செல்ல வேண்டாம் என தெளிவாக இந்தி மொழிபெயர்ப்பாளர் மூலம் தெரிவித்து அனுப்பப்பட்டது. நீங்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல உரிய அனுமதி பெற நடவடிக்கை எடுக்கிறோம் என்றனர். இதையடுத்து, அனைவரும் தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.