மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நான்கு வழிச்சாலை இருந்து வாடிப்பட்டி அணுகு சாலை பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் திரு.நாகராஜன் (55) பணியில் இருந்த போது, நான்கு வழிச்சாலை நின்று கொண்டிருந்த டாரஸ் லாரி எடுக்க சொல்லிக் கொண்டிருக்கும்போது, அச்சாலையில் வந்த மற்றொரு லாரியில் சீமை கருவேல முள் லோடு ஏற்றி வந்த பழனிச்சாமி 55 என்பவர் நின்றுகொண்டிருந்த லாரியின் கதவில் மோதினார். அவ்விபத்தில் கதவு அருகே நின்று கொண்டிருந்த சார்பு ஆய்வாளர் திரு.நாகராஜன் தலையில் பட்டு மயக்கம் அடைந்தவர், வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிர் நீத்த சார்பு ஆய்வாளர் திரு.நாகராஜன் அவர்கள் குடுத்பத்திற்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.நாராயண மூர்த்தி