கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி முனியம்மாவை தகவல் தெரிந்தவுடன், உடனடியாக ஏரியில் குதித்து உதவி ஆய்வாளர் திரு.செல்வராகவன் மற்றும் திரு.சக்திவேல் மூதாட்டியை காப்பாற்றினார்கள். பின்னர் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் காவல்துறை வாகனத்தில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். தனது உயிரை விட மூதாட்டியை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மிக சிறப்பாக பணியாற்றிய காவல்துறை உதவி ஆய்வாளர் செல்வ ராகவன் அவர்கள் வாழ்க்கையையே இழந்த நிலையில் மூதாட்டியின் உயிரை சிரமம் பாராமல், காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். மேலும் அவரது பணி சிறக்க போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்கள்.
ஓசூர் – இல் இருந்து நமது நிருபர்
A. வசந்த் குமார்