செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலை பங்களா வீட்டில் வாட்ச்மேன் வேலை செய்பவர் ராஜேந்திரன் இவர் தனது மனைவி மற்றும் தனது 2 குழந்தைகள் என குடும்பத்துடன் அங்கு தங்கி பங்களா காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார் இந்த வீட்டில் இரு தினங்களுக்கு முன்பு 3 மர்ம நபர்கள் பங்களா சுற்றுச்சுவர் தாண்டி குதித்து உள்ளே புகுந்தனர். 2 குழந்தைகளையும் ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு, காவாளி ராஜேந்திரனை கத்தியால் குத்தி ஒரு சேரில் கட்டிபோட்டு விட்டு வீட்டினுள் கொள்ளையடிக்க முயன்றனர்.
வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் இல்லாததால் ஆத்திரமடைந்த 3 மர்ம நபர்களும் காவலாளி ராஜேந்திரன் மனைவி பாரதியை ஒரு அறைக்கு அழைத்து சென்று அவர் காதில் அணிந்திருந்த கம்மலையும் கால் கொலுசையும் பறித்தனர். பிறகு மது போதையில் இருந்த அந்த 3 பேரில் ஒருவர் கத்தி மற்றும் ஸ்டன்கன் எனப்படும் செயற்கை மின்சார ஷாக் அடிக்கும் கருவியால் அந்த பெண்ணின் உடலில் மின்சாரம் பாய்ச்சி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் அப்போது வழக்கம் போல் வீட்டு வாசலில் பால் கொண்டு வந்த பால்காரரின் சத்தம் கேட்டதை அடுத்து மர்ம நபர்கள் யாரோ வீட்டிற்கு வந்துவிட்டனர் என்பதை அறிந்து அப்பெண்ணை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
பின்னர் அவர்கள் காவலாளியின் மனைவி கூச்சல் போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் திருடர்கள் தப்பித்து ஓடியுள்ளனர் கத்தி குத்து ஏற்பட்டு தலையில் காயமடைந்த ராஜேந்திரன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் பின்னர் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாமல்லபுரம் உதவி காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் உள்ளிட்ட தனிப்படை போலீசார் கெடுப்பிடி விசாரனை துவக்கினார்கள் இதில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிசிடிவி காமிரா மூலம் அவர்கள் மோட்டார் சைக்கிள் மூலம் சென்னைக்கு தப்பி சென்ற விவரத்தையும், மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து அடையாளம் கண்டு பிடித்தனர் அது அப்பகுதியை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் (22) என்பது தெறிந்தது அவரிடம் விசாரனை நடத்தி கார்த்திகேயன்(20) பெரம்பூரை சேர்ந்த மிதுன்(21), ரெட்ஹீல்ஸ் பகுதியை சேர்ந்த திணேஷ்(வயது26) ஆகிய 3 நபர்களையும் கைது செய்தனர் மேலும் மாமல்லபுரம் ஏ.எஸ்.பி. சுந்தரவதனம் தளமையிலான காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்..