மயிலாடுதுறை: இன்று 19.04.2024-ம் தேதி 3 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் உள்ள 860 வாக்குச்சாவடிகளில் காலை 07.00 மணி முதல் வாக்குப்பதிவு தக்க போலீஸ் பாதுகாப்புடன் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி அமைதியான முறையில் வாக்களித்து வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் மேற்பார்வையில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 6 காவல் துணைக்கண்காணிப்பாளர்கள், 21 காவல் ஆய்வாளர்கள், 44 அதிவிரைவு குழுக்கள் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பணியில் மாவட்டம் முழுவதும் ஈடுபட்டுவருகின்றனர்.