செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து ஒரகடம் செல்லும் சாலையில் தெல்லிமேடு கூட்டுசாலையில், குற்றச் சம்பவங்களை தடுக்கும் நோக்கிலும், குற்றவாளிகளை பிடிக்கும் நோக்கிலும் காவல் உதவி மையம் செங்கல்பட்டு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பரத் மற்றும் செங்கல்பட்டு தாலுக்கா காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.அசோகன் இவர்களின் முன்னிலையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் DR.திரு.பிரதீப் IPS அவர்களால் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்