திருவள்ளூர் : கொரோனாவுடன் வாழப் பழக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட தனி மனித பாதுகாப்பு நடவடிக்கைகள் வலியுறுத்தப்பட்டு, பெருமளவு முறையாகப் பின்பற்றப்படும் நிலை காணப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று 21 மாவட்டங்களில் புதிதாக பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் திருவள்ளூரில் 40 பேருக்கு கொரானா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருக்கும் பகுதிகளை தனிமைபடுத்தி, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடும் உன்னத பணியில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன், IPS தலைமையிலான காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பசி, தூக்கம், குடும்பம் என அனைத்தையும் மறந்து, மக்கள் பணியே, மகத்தான பணி என்று பணியாற்றும் நம் காவலர்கள் நலனுக்காக போலீஸ் நியூஸ் பிளஸ் மாவட்டம் தோறும் உள்ள குடியுரிமை நிருபர்கள் மூலம் காவலர்களுக்கு உணவு, குளிர் பானங்கள், முக கவசங்கள், கை கழுவ சேனிடைசர்கள் உள்ளிட்டவைகள் வழங்கி வருகின்றது.
கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக போராடி வரும் காவலர்கள் பாதுகாப்பு பணிக்கு சவாலாக இருப்பது பாதுகாப்பு கவச உடைகள் பற்றாக்குறையே. இதனால் பல காவலர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, போலீஸ் நியூஸ் பிளஸ் ராணிப்பேட்டை மாவட்ட நிருபரும், நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் மாநில தலைவர் (ஒளிபரப்பு ஊடக பிரிவு) திரு.பாபு அவர்கள், கொரானாவிலிருந்து பாதுகாத்து கொள்ளும் முழு கவச உடையை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன்,IPS அவர்களிடம் வழங்கினார்.
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் மாநில தலைவர் (ஒளிபரப்பு ஊடக பிரிவு) திரு.பாபு அவர்கள், கடந்த 5 வருடங்களாக சங்கத்துடன் இணைந்து, பல்வேறு சமூக பணிகளில் சிறப்பாக செயல்பட்டு, வருகின்றார். குறிப்பாக கொரானா என்றும் கொடிய தொற்று, பரவ ஆரம்பத்திலிருந்து, தன்னார்வலராக காவல்துறையினருடன் இணைந்து செயலாற்றி வருவது பாராட்டுதலுக்குரியது.