மயிலாடுதுறை: கோடை வெயிலின் தாக்கத்தினால் அவதியுறும் பொதுமக்களின் நலன்கருதி மயிலாடுதுறை ஊர்க்காவல் படை சார்பாக இன்று முதல் 10 நாட்களுக்கு தினந்தோறும் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்க மயிலாடுதுறை ஊர்க்காவல் படை வட்டார தளபதி திரு. R. அலெக்ஸாண்டர் ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி இன்று மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.