கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையத்தில் 10 வயது சிறுவன் தனியாக அழுதுகொண்டிருந்ததை கண்ட போக்குவரத்து காவலர் திரு.அருள்செல்வன் அவர்கள் சிறுவனிடம் சென்று விசாரித்தார். விசாரணையில் தான் பெங்களூரை சேர்ந்தவன் என்றும்¸ பெற்றோர் அடித்ததால் கோபித்துக் கொண்டு வந்ததாகவும் எங்கு செல்வது என தெரியாமல் நிற்பதாகவும் கூறினார். அதன்பின் பசியால் வாடிய சிறுவனுக்கு உணவளித்து குடும்பத்தாரின் கைப்பேசி எண் பெற்று தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.