திருவள்ளூர் : மற்ற மாவட்டங்களை சேர்ந்த மக்களை திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதிக்க கூடாது என காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS உத்தரவிட்டுள்ளார் தாக்கம் பல மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்த வேளையில் பிற மாவட்ட மக்களை திருவள்ளூரில் அனுமதிக்கக்கூடாது என காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், மற்ற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் நடந்தோ, வாகனங்களிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் நுழைய அனுமதிக்கக் கூடாது. சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்ககூடாது. தொழிலாளர்களையும் அழைத்துச் செல்லக் கூடாது. மற்ற மாவட்டங்களில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் வரும் ஆம்புலன்ஸ்களையும் சோதனை செய்ய, ரோந்து காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்