திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் ஆரணி ஆற்று படுகையின் ஒரு பகுதியான வெள்ளோடை எனும் ஓடையில் பொன்னேரி பிள்ளக்கார தெருவை சேர்ந்த பிளஸ் டூ படிக்கும் மாணவன் நிஷாந்த் மற்றும் வெள்ளோடையை சேர்ந்த எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் குகன் ஆகியோர் சனிக்கிழமை தினமான இன்று தனது நண்பர்களுடன் ஓடையில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது 10 அடிக்கும் மேலான பள்ளத்தில் விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.
இது குறித்து நண்பர்கள் அளித்த தகவலின் பெயரில் பொன்னேரி தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேடி இருவரையும் சடலமாக மீட்டனர். தகவல் அறிந்து அப்பகுதியில் வந்த பொதுமக்கள் மாணவர்களின் சடலத்தை கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்திற்கு நேரில் வந்த பொன்னேரி காவல் கண்காணிப்பாளர் சங்கர் தலைமையான குழுவினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு