நெல்லை : நெல்லை டவுனை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர், 19-05-2020-ம் தேதியன்று, டவுன் அருணகிரி திரையரங்கம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டவுன் வயல் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவர், ரவிச்சந்திரனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ரவிச்சந்திரன் பணம் கொடுக்க மறுக்கவும், ரவிச்சந்திரனை அசிங்கமாகவும், அநாகரிகமாக பேசி கையால் தாக்கி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அச்சுறுத்தியதாக, ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த டவுன் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.விமலன் அவர்கள் மற்றும் போலீசார், சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தா ர்கள்.