தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.சிவபிரசாத்,இ.கா.ப., அவர்கள் மாவட்டத்தில் புதிதாக பயிற்சி முடித்து மாவட்டத்தில் பணிபுரிய 63(ஆண், பெண்) ஊர்காவல் படையினரை பணிக்கு சேர்ந்தும், மக்கள் பணியில் ஈடுபடும் போது எவ்வாறு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை பற்றி எடுத்துக் கூறி அறிவுரைகளை வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் தேனி மாவட்ட ஊர்க்காவல் படையில் பணிபுரியும் நபர்கள் பணியின்போது மரணம், காயம் பட்டமைக்காக வழங்கப்படும் சேமநலநிதியானது (Benevolent Fund) இன்று (29.02.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கரங்களால் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த நபருக்கும், மற்றும் மரணம் அடைந்த நபரின் மனைவிக்கும் காசோலையாக வழங்கினார்.
இந்நிகழ்வில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், ஊர்க்காவல் படையை சேர்ந்த படை தளபதி, சரக உதவி தளபதி, வட்டார தளபதி, துணை வட்டார தளபதி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.