சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 10.05.2020, அன்று பல்லாவரம், பழைய டிரங்க் ரோடு பகுதியில் உள்ள ஷெட்டில் தங்கி வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து, அங்கு செய்யப்பட்டுள்ள சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடிப்படைவசதிகள், பற்றி கேட்டறிந்தார். மேலும் விரைவில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவீர்கள் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்வில் தெற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி.மகேஷ்வரி, இ.கா.ப, புனித தோமையர் மலை துணை ஆணையாளர் திரு.பிரபாகர் ஆகியோர் உடனிருந்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை