சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 08.05.2020 அன்று மாலை கோட்டூர்புரம், ஐஐடி வளாகத்திற்கு சென்று, கொரோனா அறிகுறி உள்ள நபர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ள, மகாநதி விடுதி பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் கிழக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.ஆர்.சுதாகர், இ.கா.ப., திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் திரு.ஜி.தர்மராஜன், இ.கா.ப ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 08.05.2020 அன்று மாலை லயோலா கல்லூரிக்கு சென்று, கொரோனாவில் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வழிஅனுப்பும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழி அனுப்பி வைத்தார். இந்நிகழ்வில் கிழக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.ஆர்.சுதாகர், இ.கா.ப திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் திரு.ஜி.தர்மராஜன், இ.கா.ப ஆகியோர் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை