சென்னை : இராணுவ அதிகாரி அவர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளரை சந்தித்து சிறப்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டமைக்காக பாராட்டினார். சென்னை , தீவுத்திடல் அருகிலுள்ள தக்ஷின் பாரத் இராணுவ தலைமையிட அதிகாரியான (Deputy Director General, Brigadier) திரு.ககன்தீப் சிங் அவர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. A.K. விசுவநாதன் IPS, அவர்களை நேற்று காலை நேரில் சந்தித்து, சென்னை பெருநகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் மேற்கொண்டமைக்காக பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் திரு.ஆர்.தினகரன் IPS., (வடக்கு ) திரு.எ.அருண் IPS, போக்குவரத்து), திரு.எச்.எம்.ஜெயராம். IPS, (தலைமையிடம்), திரு பிரேம் ஆனந்த சின்ஹா IPS, (தெற்கு), மற்றும் நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர்கள் உடனிருந்தார்கள்.