இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.பா., அவர்களின் உத்தரவின்படி இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரபு அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் துறையினர் மற்றும் தெலுங்கானா சிறப்பு காவல் படையினரின் கொடி அணி வகுப்பு பேரணி நடைபெற்றது.
இப்பேரணி சிப்காட் புளியங்கண்ணு பேருந்து நிறுத்தத்திலிருந்து தொடங்கி புத்துக்கோவில் வரையிலும், லாலாபேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி பகுதியிலிருந்து தொடங்கி லாலாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை வந்து நிறைவடைந்தது.