அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் அறிவுறுத்தலின் படி விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாகவும், covid-19 குறித்தும் 15/06/2020 அன்று கயரலாபாத் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. ராஜா அவர்கள் முன்னிலையில் காட்டு பிரிங்கியம் அருகிலுள்ள பெரிய நாகலூர் சுண்ணாம்புக்கல் சுரங்க பகுதியில் உள்ள கனரக வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் ஓட்டுனர்களுக்கு பின்வரும் அறிவுரைகளை வழங்கப்பட்டது. ஓட்டுனர் உரிமங்களை சரிவர பராமரிக்க வேண்டும். உடல்நிலையில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மருத்துவ ஆலோசனைகள் பெற்று சிகிச்சை பெறவேண்டும். கண் பரிசோதனை அடிக்கடி செய்து கொள்ள வேண்டும். கனரக வாகன ஓட்டுநர்கள் பணி முடித்து விட்டு வீட்டிற்கு செல்லும் முன்பு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் பணியிடங்களிலும் வாகனங்களிலும் sanitizer மூலம் அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். அனைவரும் SOCIAL DISTANCE யை கடைபிடிக்க வேண்டும்.
பணியிடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஓட்டுனர் அனைவரும் காவல் ஆய்வாளர் முன்பு பின்வருமாறு உறுதிமொழி ஏற்றனர். சாலை விதிகளை மதிப்போம். அதிவேகமாக செல்லமாட்டோம். மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கமாட்டோம்.
அதி வேகமாக சென்று முந்திச் செல்ல மாட்டோம். வாகனங்களை முறையாக பராமரிப்போம். பணியின் போது சோர்வு களைப்பு ஏற்படும் பட்சத்தில் முறையான ஓய்வுக்குப் பிறகு வாகனங்களை இயக்குவோம். அனைவரும் சாலை விதிகளை கடைபிடித்து விபத்தில்லா மாவட்டமாக மாற்றுவோம் என உறுதியளித்தனர்.