புதுக்கோட்டை : மன்னர்கள் மாறுவேடத்தில் நகர்வலம் செல்வதுபோல புதுக்கோட்டை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் சக்தி குமார், IPS சாதாரண உடையில் இரவு 11.00 மணியளவில் சாந்தநாதபுரம் பகுதியில் தள்ளுவண்டியில், மீன் வியாபாரம் செய்யும் வயது முதிர்ந்த பெண்ணிடம் சென்று இங்கு பிளாக்கில் சரக்கு கிடைக்குமா..? என்று விசாரித்துள்ளார்.
இவரை எஸ்பி என்று உணராத அந்தப் பெண்மணி, ‘போப்பா அங்கிட்டு! புது எஸ்பி வந்து ஒரே கெடுபிடியா இருக்கு’, சரக்கு வேணுமாம்லா இவருக்கு என்று புலம்பியதை கண்டு, சிரித்துக்கொண்டே நின்றாராம் காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் சக்தி குமார்.
எஸ்பி சற்று நகர்ந்ததும் அங்கிருந்த இளைஞர்கள், எஸ்பி உன்னிடம் என்ன விசாரித்தார் என்று கேட்டுள்ளனர். இதனை கேட்ட அந்த வயது முதிர்ந்த பெண்மணி ஆடிப் போய்விட்டாராம்.