அரியலூர் : கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி வரும் சூழலில் 24 மணி நேரமும் காவல் பணியில் ஈடுபட்டுவரும் காவல்துறையினர். தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. காவல் அதிகாரிகள் காவலர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு உபகரணங்கள் குறித்து ஆய்வு நடத்த அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் 17/06/2020 அன்று உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கயர்லாபாத் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் திரு. ராஜா அவர்கள் தலைமையில் ஆஜர் அணிவகுப்பில் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளினர்கள் கொரோனா வைரஸ் பாதுகாப்பு உபகரணங்களான சானிடைசர், கையுறை,மாஸ்க் வைத்திருப்பதை ஆய்வு செய்து உறுதி செய்தும், சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுரையும் வழங்கப்பட்டது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் காவல் ஆளினர்களுக்கு கப சுர குடிநீர் அளிக்கப்பட்டது. மேலும் தேவைக்கேற்ப அனைவருக்கும் மாஸ்க்குகள் வழங்கப்பட்டது.