திருவள்ளூர் : திருவள்ளூரை அடுத்த மப்பேடு கூட்டு சாலை பகுதியில் இன்று மப்பேடு காவல் நிலையம் சார்பில் பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக எமதர்மன், சித்திரகுப்தன் வேடமணிந்த தெருக்கூத்து நாடக கலைஞர்களை கொண்டு நூதன முறையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் டிஎஸ்பி கங்காதரன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் கண்ணையன், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன், திமுகவின் ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அப்போது காவல் நிலையம் முன்பு போலீசார் கொரோனா வவைரஸ் குறித்து சாலையில் படம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும் எமதர்மராஜா,மற்றும் சித்ரகுப்தர் வேடமணிந்த தெருக்கூத்து நாடக கலைஞர்கள் பாட்டு பாடி நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.அப்போது அந்த வழியாக ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்காமல் சாலைகளில் சுற்றித் திரிந்த வந்த வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து மாலை அணிவித்து இனிமேலும் சாலையில் சுற்றித்திரிய மாட்டோம், வீட்டிலேயே இருப்போம் என உறுதிமொழி ஏற்க வைத்து எடுத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்