புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளிலிருந்து முழு ஊரடங்கின் போது சட்டத்திற்குப் புறம்பாக மதுபானம் விற்பனை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களிடமிருந்து இதுவரை கைப்பற்ற சுமார் 1200 மது பாட்டில்கள் அனைத்தும் மணமேல்குடி காவல் ஆய்வாளர் திரு.சாமுவேல் ஞானம், மீமிசல் காவல் உதவி ஆய்வாளர் திரு.துரைசிங்கம், வருவாய் ஆய்வாளர் திரு. முத்துக்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் காவலர்கள் முன்னிலையில் அனைத்தும் அழிக்கப்பட்டது.
புதுக்கோட்டையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.முகமது ஆசிக்