சென்னை: சென்னை அடுத்த பெரும்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் திரு.திருநாவுக்கரசு தலைமையில் காவலர்கள் திரு.ரவிவர்மன்,திரு.நரேஷ், ஆகியோர் பெரும்பாக்கம் சர்ச் பகுதியில் இரவு வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இருவர் போலீசாரை கண்டதும் தப்பிசெல்ல முயன்றனர்.
தப்பிக்க முயன்ற இருவரையும் துறத்தி பிடித்த போலீசார் அவர்கள் கொண்டு வந்த வாகனத்தை சோதனை செய்தபோது வாகனத்தில் ஒளித்து வைத்திருந்த சுமார் 3 கிலோ கஞ்சாவையும்,ஜூபிடர் இருசக்கர வாகனத்தை யும் பறிமுதல் செய்து இருவரையும் பெரும்பாக்கம் காவல் நிலையம் அழைத்து சென்றனர். பெரும்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.கனகதாசன் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் ஒருவன் பள்ளிகரனை பகுதியை சேர்ந்த விக்கேனேஷ் 22. மற்றொருவன் மாதாவரம் பகுதியை சேர்ந்த இன்பரசன் (எ) காளிதாஸ் 21. என்பதும் ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வந்த கஞ்சாவை சென்னையின் புறநகர் பகுதிகளில் விற்று வந்ததும் தெரியவந்தது.
பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை