திருவள்ளூர் : கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் அனைவரும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்கள் தலைமையில் ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்கள், பெரியபாளையம் ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி அவர்கள் மற்றும் காவலர்கள் கொசவன் பேட்டை பகுதியில் வசித்து வரும் இருளர் இன மக்கள் 250 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை 20.04.2020 அன்று காவல்துறையினர் வழங்கினார்கள்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்