தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்தின் 69வது உற்சவ திருவிழா நாளை (09.05.2025) மற்றும் (10.05.2025) ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. மேற்படி நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (08.05.2025) பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரசக்கதேவி ஆலயம் மற்றும் அதன் வளாக பகுதிகளுக்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர், காவல் துணை கண்காணிப்பாளர் உட்பட காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.