சென்னை : இன்று 20.02.2021, சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் திரு.கோதண்டராஜ் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., ஆகியோரின் தலைமையில் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில், காவல் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற நடுவர்கள், அரசு வழக்குரைஞர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் சென்னை பெருநகர காவல் அதிகாரிகள், நீதிமன்ற நடுவர்கள், அரசு தரப்பு வழக்குரைஞர்கள், கலந்து கொண்டு, நீதிமன்ற விசாரணையிலுள்ள வழக்குகளில் உரிய முன்னேற்றம் காணவும், உரிய தொடர்ச்சியான நடைமுறைகள் மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரவும், நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்து விவர ஆய்வும், காரணங்கள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் காவல் அதிகாரிகள் மற்றும் சென்னை பெருநகர நீதிமன்ற நடுவர்கள், அரசு வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்