800 கிலோ அரிசி, கடத்த முயன்றவர் கைது!

தர்மபுரி :  தர்மபுரி மாவட்டம்,  மகேந்திரமங்கலம் அடுத்த காடுச்செட்டிப்பட்டி சோதனை சாவடியில், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் , வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, அதில், 800 கிலோ ரேசன் அரிசி கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. விசாரணையில் கவுண்டனூரை சேர்ந்த துரை, (44),  என்பவர், கிராமபுறங்களுக்கு சென்று ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, கர்நாடகா மாநிலங்களில்,  கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து ரேஷன் அரிசியுடன் சரக்கு வாகனத்துடன் பறிமுதல் செய்த காவல்துறையினர், துரையை கைது செய்தனர்.

 

தர்மபுரியில் இருந்து நமது நிருபர்

க.மோகன்தாஸ்.

மேலும் செய்திகள்

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist