தருமபுரி : தருமபுரி மாவட்டம், கோட்டப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான நாய்க்குத்தி எனும் இடத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.சிங்காரவேலு அவர்கள் தலைமையில் போலீசார் மதுவிலக்கு குற்றம் தொடர்பாக கண்காணித்துக் கொண்டிருந்தபோது கள்ளக்குறிச்சி மாவட்டம் ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்ற நபர் நான்கு சக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்துள்ளார். அப்போது போலீசார் தடுத்து நிறுத்தி லாரியை சோதனை செய்தபோது சுமார் 500 லிட்டர் கள்ளச்சாராயத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது பின்னர் மேற்கண்ட நபரை கைது செய்து விசாரித்ததில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டதை ஒப்புக்கொண்டார். மேற்படி கோட்டப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு காவல் ஆய்வாளர் திரு.சிவக்குமார் அவர்களிடம் ஆஜர் படுத்தப்பட்டு அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.