சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கண்ணகி நகர் சிறார் மன்றத்தில் கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறுவர், சிறுமிகளுக்கு இனியப்பம் (Cake) வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள், (25.12.2019) கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி கண்ணகி நகர் சிறார் மன்றத்தில் (Boys Club) சிறார் மன்ற சிறுவர், சிறுமியர்களுடன் கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை கூடுதல் இயக்குநர் (தலைமையிடம்) அகர் திருமதி.சீமா வால், இ.கா.ப., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறுவர், சிறுமிகளுக்கு இனியப்பம் (Cake) வழங்கி கிருஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், அடையாறு துணை ஆணையாளர் திரு.பி.பகலவன்,இ.கா.ப., துரைப்பாக்கம் உதவி ஆணையாளர் திரு.லோகநாதன், சிறார் மன்ற நிர்வாகிகள் மற்றும் சிறார் மன்ற சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்

S. அதிசயராஜ்
சென்னை















