கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் நல்லுறவை மேம்படுத்தும் விதமாகவும் மாணவ,மாணவிகள் திறமையை மேம்படுத்தும் நோக்கத்திலும் காவல்துறையால் துவங்கப்பட்ட பாய்ஸ் கிளப் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் (29.04.2023), -ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மோகன்ராஜ் அவர்களால் சின்னசேலம், ஊளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் பகுதிகளில் இயங்கிவரும் பாய்ஸ் கிளப் சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு கோடை விடுமுறை நாட்களில் தேவையான விளையாட்டு உபகரணங்கள் கிரிக்கெட் பேட், வாலிபால், இறகு பந்து, Carrom board, football மற்றும் கல்வியறிவினை மேம்படுத்தும் வகையில் சிறந்த புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதில் சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்கள். அப்போது பேசிய காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் இடையே உறவினை மேம்படுத்தும் விதமாகவும் மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் நோக்கத்திலும் செயல்பட்டு வருகின்றது BOYS CLUB-யை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தங்களின் தனித் திறமைகளை வெளிக் கொண்டு வரவும் விளையாட்டில் சிறந்தவர்களாக விளங்க அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பாலசுப்ரமணியன் பாய்ஸ் கிளப் உறுப்பினார்கள் மற்றும் சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொண்டனர்.