திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில் மர்ம நபர்கள் சுற்றுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் உத்தரவின் பேரில் திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய போலீசார் செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு குற்ற செயலில் ஈடுபடும் நோக்கத்துடன் கையில் வால் போன்ற ஆயுதம் கொண்டு சுற்றிய மூன்று நபர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரசாந்த் (21), தளபதிராஜ் (25), பொண்ணுமாந்துரை புதுபட்டியைச் சேர்ந்த ரஞ்சித் (24) என்பவர்கள் என தெரியவந்தது மேற்கொண்டு இவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா