புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் ரூ.17,25,000/- (பதினேழு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம்) மதிப்புள்ள தொலைந்து போன 115 மொபைல் போன்களை கண்டறிந்து உரிமையாளர்களை நேரில் வரவழைத்து அவர்களிடம் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்கள், தலைமையில் இன்று (26.10.2023)-ம் தேதி ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுவரையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் ரூ.1,11,95,000/-(ஒரு கோடியே பதினொரு லட்சத்து தொன்னுத்தி ஐந்தாயிரம்) மதிப்புள்ள 583 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.