தருமபுரி : தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான மாட்லாம்பட்டி – கெங்குசெட்டிபட்டி பிரிவு ரோடு வழியாக காவல் உதவி ஆய்வாளர் திரு.சபி அவர்கள் காவலர்களுடன் மதுவிலக்கு சம்பந்தமாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படியான நபர்கள் மூட்டையுடன் நின்றுகொண்டிருந்தனர் போலீசாரை கண்டதும் தப்பிக்க முயற்சி செய்த இரு நபர்கள் பெரியண்ணன் மற்றும் சந்தோஷ் ஆகியவர்களை பிடித்து மூட்டையை பிரித்து பார்த்ததில் சுமார் 68 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது இதைத்தொடர்ந்து அவர்களை விசாரித்த போது அதிக போதைக்காக ஊமத்தை விதை சாற்றை கலந்து இருப்பதாக கூறி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததை ஒப்புக் கொண்டனர் இதைத் தொடர்ந்து காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு இரு நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டது.