கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்., அவர்கள் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் உள்ளிட்ட மூன்று உட்கோட்டங்களில் முக்கிய இடங்களில் பந்தல்கள் அமைத்து சாலைகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய பொதுமக்களை நிறுத்தி அவர்களுக்கு விதிமீறல்களால் ஏற்பட்ட விபத்துகளை வீடியோக்களாக தொகுத்து தொலைக்காட்சிகள் வழியாக காட்டப்பட்டது. இதன் மூலம் இரு சக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் பயணிக்கக்கூடாது, தலைகவசம் கட்டயாம் அணியவேண்டும், பேருந்துகளில் பயனத்தின் போது படிக்கட்டுகளில் நிற்கக் கூடாது, வாகனத்தை ஓட்டுபவர்கள் உடல்நிலை, மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும் போதோ அல்லது மது அருந்தி விட்டோபத கண்டிப்பாக வாகனத்தை இயக்க கூடாது. எந்தவொரு வாகனத்தையும் முந்திச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்லக்கூடாது போன்ற விதிமீறல்களால் ஏற்பட்ட விபத்துக்கள் குறித்து அறிவுரை வழங்கபட்டது.
சாலை விபத்துகள் ஏற்பட முக்கிய காரணம் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமையால் ஏற்படுகிறது என்பதால் அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுத்தபட்டது.
காவல்துறையினரின் விழிப்புணர்வின் மூலம் பொதுமக்கள் இனி நாங்கள் கட்டாயம் போக்குவரத்து விதிகளை மதித்து நடப்போம் என்றும் இருசக்கரவாகனங்களில் இனி கட்டயாம் தலைகவசம் அணிந்து பயணிப்போம் என்று உறுதியளித்தனர்.
இந்நிகழ்ச்சியினை கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ஜவஹர்லால் தலைமையிலும், திருக்கோவிலூர் உட்கோட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.விஜய கார்த்திக் ராசா தலைமையிலும், உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஷ் தலைமையிலும் தொடங்கிவைக்கபட்டது, இந்நிகழ்வில் துணை காவல் கண்காணிப்பளார்கள், காவல் ஆய்வளர்கள், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வளர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.