கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மருத்துவ படிப்பு படிக்காத போலி மருத்துவர்கள் மற்றும் அவர்கள் நடத்தும் போலியான சிகிச்சையகம் பற்றிய வரப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ் அவர்கள் உத்தரவின்படி (15.04.2023),-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் திரு.ஏழுமலை, வட்டார மருத்துவ அலுவலர் திரு.பால தண்டாயுதபாணி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு.ரவி ஆகியோர் சோதனை ஈடுபட்டபோது மாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில் விஜய்(26) த/பெ கண்ணன், கரடிசித்தூர், எடுத்தவாய்நத்தம் ஊராட்சி மன்றம் அருகில் ரகுமான்(52) த/பெ திப்பு சாகிப், எடுத்தவாய்நத்தம் மற்றும் திருநாவலுர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருநாவலுர் காவல் ஆய்வாளர் திரு.அசோகன், வட்டார மருத்துவ அலுவலர் திருமதி.செல்வி மற்றும் சுகாதார ஆய்வாளர் திருமதி.சுதா ஆகியோர் கெடிலம் பகுதியில் சோதனை ஈடுபட்டபோது கிருபாநிதி(35) த/பெ மாகராஜன், கெடிலம் என்பவர்கள் மருத்துவ படிப்பு படிக்காமல் மருந்தக கடையில் போலி மருத்துவம் பார்ந்துவந்த மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மருந்தக கடையில் போலி மருத்துவர்கள் மற்றும் அவர்கள் நடத்தும் போலியான சிகிச்சையகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.