கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பரிசோதனை செய்ய பயன்படும் அதிநவீன ஆல்கஹால் சுவாச அளவீட்டு கருவியினை (BREATH ANALYZER) மூன்று உட்கோட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர்களுக்கு அளித்தும் மேலும் காவல்துறையின் பயன்பாட்டிற்கு கூடுதலாக 6 இருசக்கர ரோந்து வாகனங்கள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் 8 CCTV கேமராக்களையும் பயன்பாட்டிற்கு துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்ட காவல் அலுவலகம் முழுவதும் 8 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் கட்டுபாட்டு அறை தனிப்பிரிவு அலுவலகத்தில் அமைத்து 24×7 மணிநேரமும் கண்காணிக்க மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் திரு,சண்முகம் அவர்களிடம் ஒப்படைத்தார்.
அதிநவீன ஆல்கஹால் சுவாச அளவீட்டு கருவியின் மூலமாக வாகன ஓட்டிகள் மது அருந்தியுள்ளதை போலீசார் துல்லியமாக கண்டு பிடிக்க முடியும், தற்போது வழங்கப்பட்டுள்ள டிஜிட்டல் ஆல்கஹால் சுவாச அளவீட்டு கருவி (BREATH ANALYZER) -ல் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை சோதனை செய்யும் போது ஆக்டிவ் மோட், பாசிட்டிவ் மோட் என 2 வகைகளில் சோதனை நடத்த முடியும், சோதனைக்கு ஒத்துழைக்காத வாகன ஓட்டிகளிடம் பாசிட்டிவ் மோட் மூலமாக வாகன ஓட்டியின் வாயின் அருகில் கொண்டு சென்றாலே மது அருந்தியுள்ளாரா என்பது குறித்து அறிந்துகொள்ள முடியும். மேலும் ஆக்டிவ் மோட் மூலமாக ஆல்கஹால் சுவாச அளவீட்டு கருவி (BREATH ANALYZER) -ல் சோதனை செய்யும் போது வாகன ஓட்டியின் முகத்தை புகைப்படம் எடுப்பதோடு, வாகன பதிவுவெண், சம்பவ நேரம் இடம் போன்ற முழு விபரங்களுடன் அபராத ரசீது கிடைக்கும். அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குற்ற செயல்கள் நடந்தால் தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கை மேற்கொள்ளவும், குற்றத்தை தடுக்கவும் ஏதுவாக இரு சக்கர ரோந்து வாகனங்கள் கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே மாவட்டம் முழுவதும் 13 வாகனங்கள் சுழற்சி முறையில் ரோந்து பணியில் உள்ளன. தற்போது கூடுதலாக கள்ளக்குறிச்சி, சின்னசேலம், உளுந்தூர்பேட்டை, எடைக்கல், திருக்கோவிலூர், திருப்பாலபந்தல் ஆகிய 6 காவல்நிலையங்களுக்கு இருசக்கர ரோந்து வாகனங்களை காவல்துறையின் பயன்பாட்டிற்கு துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.ஜவஹர்லால், திரு.விஜய கார்த்திக் ராஜ் அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள், ரோந்து வாகன காவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் இவர்களுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சண்முகம் உடனிருந்தார்.