திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கணக்கம்பட்டி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றி திரிந்துள்ளார்.
தகவலறிந்த ஆயக்குடி காவல் நிலைய முதல் நிலை காவலர் திருமதி.சுகப்பிரியா அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் அப்பெண் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ஜெய ஷோபனா ஹரிணி என்பவர் என தெரியவந்தது.
இதனையடுத்து காவலரும், காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.முத்துலட்சுமி அவர்களும் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை குளிக்க வைத்து, ஆடைகளை மாற்றி உணவு வாங்கிக் கொடுத்தார்கள்.
மேலும் ஆய்வாளர் திருமதி.முத்துலட்சுமி அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாப்பு நலன் கருதி தாராபுரம் ரோட்டில் உள்ள மால்குடி காப்பகத்தில் சேர்த்தார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா