இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்களின் தலைமையில் தேர்தல் குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்றது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு குமார் CCW, திரு.குணசேகரன் CWC, கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு. பிரபு, இராணிப்பேட்டை உட்கோட்டம், திரு.வெங்கடேசன் அரக்கோணம் உட்கோட்டம் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.