கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு N.மோகன்ராஜ்., அவர்கள், உத்தரவின் பேரில் மாவட்டத்தில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பவர்களை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் (23.01.2023)-ந் தேதி எலவானாசூர்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உதவி ஆய்வாளர் திரு. திருமால் அவர்கள் தலைமையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அயன் குஞ்சரம் கிராமம் அருகே வயல்வெளியில் நாட்டுத் துப்பாக்கியை வைத்து வேட்டையாடிக் கொண்டிருந்த பவுல் அமல்ராஜ்(21), த/பெ வின்சென்ட், மெயின் ரோடு எறையூர் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் 2 மயில்களை வேட்டையாடியது தெரிய வரவே குற்றவாளியை கைது செய்து. அவரிடமிருந்து 1 நாட்டுத் துப்பாக்கி, 2 மயில்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உளுந்தூர்பேட்டை வன சரக அலுவலர் திரு. ரவி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் யாரேனும் அனுமதியின்றி உரிமம் இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தாலோ, வனவிலங்குகளை வேட்டையாடினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.