பாலியல் வன்புணர்வு, வாலிபருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை!
திண்டுக்கல் : திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கியமாதா தெருவை சேர்ந்த வினோத் என்பவர் தன்னுடன் பணிபுரியும் சாமியார் தோட்டம் பகுதியைச் சேர்ந்த கவிதா உதவியுடன் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியை திருமணத்திற்காக கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக கடந்த (28. 11. 2016) ஆம் தேதி திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட வினோத் என்பவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 40 ஆயிரம் அபராதமும், அவருக்கு உடந்தையாக இருந்த கவிதாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 10,000 அபராதமும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
லாட்டரி விற்ற முதியவர் கைது!
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே லாட்டரி விற்ற முதியவர் மற்றும் பணம் வைத்து சூதாடிய கும்பலை சாணார்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ஜான்சன் ஜெயக்குமார், அவர்களது தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.
பாலியல் வன்கொடுமை, வாலிபருக்கு சிறை!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த சுல்தான் மைதீன்(32), என்ற வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.