திருவள்ளூர்: திருவள்ளூர், பொன்னேரியில் கடந்த 4 ம் தேதியன்று 79 வயது முதியவர் கொரோனா பாதிப்பால் சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், அக்குடும்பத்தில் 6 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இந்நிலையில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன், IPS உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி. கல்பனாதத் பாதிக்க பட்ட பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அப்பகுதி தெருக்களில் வெளி ஆள்களை உள்ளே அனுமதிக்க கூடாது எனவும், தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கும் எனவும், அப்பகுதி தெருக்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என தெரிவித்தார். ஆய்வின் போது உதவி ஆய்வாளர் திரு.மகாலிங்கம் உடனிருந்தார்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்