திருப்பத்தூர் : திருப்பத்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்களின் வழிகாட்டுதலின் படி உதவி ஆய்வாளர்கள் தலைமையில் மாவட்டத்தின் முக்கிய மலைப்பகுதிகளான புதூர் நாடு, சேம்பரை கிராமத்தில் 1,700 லிட்டர் சாராய ஊறல்கள் அழிக்கபட்டது. மேலும் வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சுரேஷ் பாண்டியன் மற்றும் வாணியம்பாடி வட்ட காவல் ஆய்வாளர் திரு.நாகராஜன் தலைமையில் திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லை மற்றும் ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள கொரிப்பள்ளம் மலைப்பகுதியில் சுமார் 1,800 லிட்டர் சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டது. மேற்கண்ட இடங்களில் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய அனைத்து பொருட்களையும் அழித்தனர். என்பதனை தெரிவித்து கொள்ளப்படுகிறது.