கிருஷ்ணகிரி : ஓசூரில் சிகரெட் நிறுவன அதிகாரி கடத்தப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல நிறுவனத்தில் பணியாற்றி வரும் அதிகாரி பீட்டர் லூயிஸ் என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் கடந்த 2ஆம் தேதி கடத்தி சென்ற இருந்தது இரண்டு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டி பாதி வழியிலேயே அவரை இறக்கி விடப்பட்டு இருந்த நிலையில்.கடத்தல் கும்பலை போலீசார் தேடி வந்த நிலையில் 6 பேர் இன்று கைது செய்தனர் இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பகுதிகளை சேர்ந்த 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் என தெரியவந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த காவல் துறை மிக சிறந்த முறையில் உடனடி நடவடிக்கை எடுப்பது அந்த மாவட்டத்திற்கும், ஓசூர் பொது மக்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது… கிருஷ்ணகிரி மாவட்டம் காவல் துறை பணி சிறக்க போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்கள்…
ஓசூர் – இல் இருந்து நமது நிருபர்
A. வசந்த் குமார்