கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் குற்றசம்பவங்களை தடுப்பதற்காகவும், நடந்த குற்றங்களை கண்டுபிடிப்பதற்காகவும், குற்றம் நடவாமல் தடுக்கும் பொருட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மாவட்டத்தின் முக்கிய இடங்களில் CCTV கேமராக்கள் பொதுமக்கள் வைக்க வேண்டும் என்று காவல்துறை சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் (16.03.2023)-ந் தேதி கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.இரமேஷ் அவர்கள் மேற்பார்வையில் சின்னசேலம் காவல்நிலைய காவல்துறையினர் மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு சின்னசேலம் பேருந்துநிலையம், கடைவீதி, இரயில் நிலையம் செல்லும் வழி உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஒரே நாளில் 23 CCTV கேமராக்கள் மற்றும் நாககுப்பம், காட்டனந்தல் ஆகிய கிராமங்களில் சட்டவிரோத மதுபான குற்றங்களை தடுக்க புறக்காவல் நிலையத்தையும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மோகன்ராஜ் அவர்கள் பொற்கரங்களால் திறந்துவைக்கபட்டது.
இதன் மூலம் சின்னசேலம் பகுதியில் குற்றம் நடைபெறுவதை தடுக்கவும் குற்றம் செய்பவரை கண்டறிய மட்டுமல்லாமல் பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்காகவும் காவல்துறை சார்பாக குற்ற தடுப்பு நடவடிக்கையை கட்டுபடுத்தும் நோக்கில் பொதுமக்களின் பேராதரவுடன் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்றும் மேலும் புறக்காவல் நிலையங்களில் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் காவல் துறையினர் பாதுகாப்புபணியில் ஈடுபடுவார்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.இரமேஷ், காவல் ஆய்வாளர் திரு.இராஜாராம், சின்னசேலம் ரோட்டரிக்ளப் சங்க தலைவர் திரு.தேவநாதன், சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் AT.ஆறுமுகம், திரு.ஜெகன்நடராசன், திரு.அரசு, திரு.செந்தில் மற்றும் பொதுமக்கள் பெரும்பாலானோர் கலந்துகொண்டனர்.